விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல்..

விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் ‘எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்’ என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1718431 statue - 2026
மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories