அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Published:

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட நிலையில் இருதரப்பினர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் இபிஎஸ் தரப்பைச்சேர்ந்த 14பேரை கைது செய்தனர்

அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இந்த நிலையில், இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

768221 chennai 07 - 2026
500x300 1727375 admk head office - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img