மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைப்பேன் -இபிஎஸ் சபதம்..

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து, வணங்குகிறேன். பொன்விழா ஆண்டில் வீறுநடை போடும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த 11-ந்தேதி நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களில் ஒருவனாக கிளை செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் என்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பின், இந்த மாபெரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன். வெற்றி பாதை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளை புரிந்து, பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று, பெருமைமிகு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை அ.தி.மு.க.வையே சாரும். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் நலப்பணிகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நம் இருபெரும் தலைவர்கள் அமைத்துதந்த பாதையில், இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றி பாதையில் அழைத்து செல்வேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கட்சியினரின் மேன்மைக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், சாதி-மத பேதமின்றி, விருப்பு-வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன். ”எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்” என்று முதல்-அமைச்சராக, சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஆற்றிய சிங்க கர்ஜனை உரை நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்பேன், உழைப்பேன். இதுவே எனது லட்சியம். இந்த லட்சியத்துக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் தீய சக்திகளை வேரோடு ஒழித்து, வெகு விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வதற்கு பொன்விழா ஆண்டில் சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.

images 32 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories