மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைப்பேன் -இபிஎஸ் சபதம்..

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து, வணங்குகிறேன். பொன்விழா ஆண்டில் வீறுநடை போடும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த 11-ந்தேதி நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களில் ஒருவனாக கிளை செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் என்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பின், இந்த மாபெரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன். வெற்றி பாதை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளை புரிந்து, பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று, பெருமைமிகு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை அ.தி.மு.க.வையே சாரும். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் நலப்பணிகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நம் இருபெரும் தலைவர்கள் அமைத்துதந்த பாதையில், இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றி பாதையில் அழைத்து செல்வேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கட்சியினரின் மேன்மைக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், சாதி-மத பேதமின்றி, விருப்பு-வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன். ”எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்” என்று முதல்-அமைச்சராக, சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஆற்றிய சிங்க கர்ஜனை உரை நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்பேன், உழைப்பேன். இதுவே எனது லட்சியம். இந்த லட்சியத்துக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் தீய சக்திகளை வேரோடு ஒழித்து, வெகு விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வதற்கு பொன்விழா ஆண்டில் சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.

images 32 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

Entertainment News

Popular Categories