குமரி அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலே பலி..

1087061 untitled 14 - 2026

கன்னியாகுமரி அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் பாலசுந்தரம். இவரின் மகள் உமாவுக்கு தலை பொங்கல் என்பதால் பொங்கல் சீர்வரிசை கொடுக்க முடிவு செய்தனர். இதனால் காக்கமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிக்கு காரில் (சுமோ) பொங்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். காரில் தந்தை பாலசுந்தரம் மனைவி சுபா (வயது 55) உறவினர்கள் பிரேமா(வயது 45), சுப்பு என்ற சுப்புலெட்சுமி (55), உமா(50), பாட்டி உலகம்மாள் (75) சிறுமி சிபிக்ஷா ஆகியோர் இருந்துள்ளனர். இந்த காரை ஜெகன் என்ற ஜெகநாதன் (வயது 28) ஓட்டினார். நாஞ்சில் புத்தனாறுகால்வாய் சாலைவழியே தாழக்குடி நோக்கி கார் சென்றது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதில் கார் பலமுறை உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உமா, உலகம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த 2 பேரின் உடலைகளை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை பொங்கலுக்கு பொங்கல் படி கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories