திருப்பதி கோயிலில் ஜன 1 முதல் 11 வரை காணிக்கை வருவாய் ரூ.42.88 கோடி..

Published:

images 51 1 - 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் நேற்று வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்துள்ளது. திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவதைப் போல மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் நேற்று வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்துள்ளது. 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாளில் ரூ.42 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று நள்ளிரவு மூடப்பட்டது. 2.10 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக 6.5 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். மீண்டும் அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img