தங்கள் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்!

modi ji parliament speech - 2026

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கும் ராகுல் பேச்சுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கும் மக்களாகிய மகேசர்கள்

என்னைப் போல இந்த தேசத்திலே பொதுவாழ்க்கையிலே பலர் இருக்கிறார்கள்.   அவர்கள் குடும்பத்திலே யாரும், கிராமத்தலைவராகக் கூட இதுவரை இருந்ததில்லை, கிராமமன்ற உறுப்பினராகவும் இருந்ததில்லை.   அரசியலிலே எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.   ஆனால் இன்று, பல மகத்துவம் வாய்ந்த பதவிகளை, அடைந்து விட்டு, தேசத்திற்கு சேவை புரிந்து வருகிறார்கள்.  

இதற்கான காரணம் என்றால், பாபாசாகேப் ஆம்பேட்கர் அளித்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தான், இது தான் எங்களைப் போன்றோருக்கு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது. 

மேலும் என்னைப் போன்ற அநேகர் இருக்கின்றார்கள், இவர்களுக்கெல்லாம், பாபாசாகேப் ஆம்பேட்கர் வாயிலாக அளிக்கப்பட்ட அரசியல்சட்டம், இதுவரை வருவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது.  

மேலும் மக்களாகிய மகேசர்கள் அதன் மீது தங்கள் ஆமோதிப்பை அளித்திருக்கிறார்கள்.   3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். 

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும்

2014ற்கு முன்பாக,  அப்படியும் ஒரு காலம் இருந்தது, அப்போதெல்லாம், தீவிரவாதிகள் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்துக்கு, இஷ்டத்துக்கு வருவார்கள், தாக்குதல் நடத்துவார்கள்.   ஆனால் அரசாங்கங்களோ, சும்மாவே பார்த்திருந்தார்கள்.  

வாயைத் திறக்கக்கூட திராணியில்லாமல் இருந்தார்கள்.   இன்று, 2014ற்குப் பிறகான இந்துஸ்தானம், வீட்டிற்குள்ளே புகுந்து திருப்பி அடிக்கிறது.   மேலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் கூட, பாடம் புகட்டும் வல்லமையை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம். 

தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிவான், தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும் என்று.

எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை நிலைநாட்ட முயற்சி செய்யும் காங்கிரஸ்

காங்கிரசின் வரலாற்றிலேயே, இது தான் முதல் தடவை.   அவர்கள் தொடர்ந்து மூன்று முறைகளாக, காங்கிரஸால் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை.   தன்னுடைய தோல்வியை, காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமேயானால் நன்றாக இருக்கும். 

மகேசர்களான மக்கள் அளித்திருக்கும் கட்டளையை, சிரமேற் தாங்க வேண்டும்.   ஆனால் இவர்களோ, தலைகீழாக அல்லவா நின்று கொண்டிருக்கிறார்கள்!!   மேலும் காங்கிரஸ், மற்றும் அதன் சூழலமைப்பு, இந்தியாவின் குடிமக்களின் மனதிலே, எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை, அவர்கள், நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories