டோனியை அணியிலிருந்து நீக்கியது சரியான முடிவு தான்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சை பேச்சு

Published:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை அணியில் இருந்து நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான T20 போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை நீக்கி இந்திய தேர்வுக் குழு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது.
மேலும், 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பையை மனதில் வைத்துக்கொண்டு தோனிக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அதிகமான போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்து அவரை மெருகேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அகர்கரின் இத்தகைய கருத்து டோனி ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

03 Oct29 Dhoni - 2026

Related articles

Recent articles

spot_img