
ராஜபாளையத்தில் பிரபலமான பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவில் ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக 77 ஆவது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் ராஜபாளையம் மக்களுக்கு சுதந்திர தின நினைவு சின்னமாக விளங்கும் இந்த வளைவில் லாரி மோதி சேதமானது.இந்த வளைவை ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நன்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் புதுப்பித்து ஆண்டு தோரும் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று பாரம்பரிய முறைப்படி விழா கொண்டாடப்பட்டு பெரியோர்கள் கௌரவித்தது மரியாதை செய்யப்படுகின்றனர்.
இந்த சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.இங்கு வைத்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி என் சி சி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை உடன் தீயணைப்பு நிலைய அதிகாரி பி. முத்து செல்வம் டைகர் பர்னிச்சர் அதிபர் டைகர் சம்சுதீன் ராஜுக்கள் கல்லூரி என்சிசி ஆசிரியர் ஜெகநாத் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் அனைவரையும் வரவேற்று இனிப்புகள் வழங்கி 77 வது குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடினர் .
நிகழ்ச்சியில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்




