ரயில்களில் கூட்டம்! சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5-க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடும் நெரிசல் இருந்ததோடு, படிகள் வரை நின்றபடி மக்கள் பயணம் செய்தனர்.
இதுகுறித்து கேட்டபோது ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து அதிகஅளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 5-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன.
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு 3, 5 தேதிகளில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் எண் 06060: கொச்சுவேலி – ராமேஸ்வரம் சிறப்பு ரெயில், கொச்சுவேலிக்கு 19.15 மணிக்கு புறப்படும். நவம்பர் 05-ம் தேதி ரமேஸ்வரத்தில் 07.45 மணிக்கு சென்றடையும். அடுத்த நாள்.
நிறுத்தங்கள்: கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு ஹால்ட், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பக்கோவில் சந்தை, சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம்.