நாகூர் தர்கா 462 வது பெரிய கந்தூரி நாளை முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்வான மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று, நாகூர் தர்கா நிர்வாகி கே.அலாவுதினிடம் வழங்கினார். உடன் நீதியரசர் அக்பர் அலி உள்ளார்.