February 22, 2026, 2:16 PM
30.4 C
Chennai

சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: வடமாநில பயங்கரவாதி கைது!

chennai central railway station - 2026

இலங்கை தொடா் வெடிகுண்டுகளைத் தொடா்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிகம் பேர் வந்து செல்லும் நாட்டின் நுழைவாயிலான சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பயணிகளின் உடைமைகள் நன்கு பரிசோதிக்கப் பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டினரையும் குறிவைத்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடா் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் நடத்தப் படப் போகும் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தது இந்திய உளவுத் துறை! தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் கைதான ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் மூலம் உளவுத் தகவல்களை அறிந்து, இலங்கைக்கும் கொடுத்தது.

இதனால் இந்தியாவின் தென்பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடும் என்று சந்தேகிக்கப் படுவதால், கடற்கரையோர புனிதத் தலங்கள், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றன. ஆபரேஷன் ஸ்டிரோமிங் என்ற இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினா், ரயில்வே காவல் துறையினா் இணைந்துள்ளனர்.

இதனிடையே, வடமாநிலத்தில் இருந்த தப்பி வந்த தீவிரவாதி ஒருவர் சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார். வடமாநில போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தமிழக போலீசார் சுற்றிவளைத்து தீவிரவாதியை பிடித்தனர்! கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories