மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்… ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கருணாநிதி உள்பட அனைவரும் கண்டித்தனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. 3 நாள்களுக்குப் பிறகு மென்மையாக ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்கஅதிமுக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோடைகாலம் என்றால் தண்ணீர் பிரச்னை வரத்தான் செய்யும். திமுக ஆட்சியிலும் பிரச்னை இருந்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே வேலூர் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் நெமிலி அருகே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப் போவதாகக் கூறினர். அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவருவதாகக் கூறினர். அதையும் செய்யவில்லை. திமுக ஆட்சின்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அந்தப் பணிகளும் மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Topics

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories