December 5, 2025, 1:58 PM
26.9 C
Chennai

என்ன…?! அஞ்சல் துறை தேர்வில் தமிழ் இல்லையா?

post office 1
post office 1

அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை என்று பொங்கி எழுந்துள்ளார்கள் தமிழகத்தின் சில அரசியல்வாதிகள்.

தற்போதய இந்த தேர்வானது புதிய பணி நியமனத்திற்கு அல்ல. ஏற்கனவே பணியிலிருக்கும் தபால் உதவியாளர்கள், மற்றும் தபால்களை வரிசைப்படுத்தும் பணியாளர்களுக்கான துறை சார்ந்த தேர்வு என்பது தெரியாமலேயே மொழி ரீதியாக மக்களை தூண்டி விடும் மலிவு அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த தேர்வுகள் இப்படி தான் நடக்கின்றன.

இந்த தேர்வில் மொழி சார்ந்த கேள்விகளோ, பொது அறிவு, அரசியல்,வரலாறு போன்ற எந்த பாடங்களும் இடம்பெறாது. ஏற்கனவே பல வருடங்களாக பணியில் உள்ளவர்கள், தங்கள் பணியினை , அவர்கள் உபயோகிக்கும் ‘தபால் கையேட்டின்’ அடிப்படையிலேயே இந்த தேர்வுகள் நடத்தப்படும்.

மேலும் இந்த தேர்வானது தபால் கையேடுகளை பார்த்தே எழுதக்கூடிய நிலையில், வேறு மொழிகளில் இந்த தேர்வை எப்படி நடத்த முடியும் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் அறிக்கைகளை அரசியல் தலைவர்கள் விடுப்பது பொறுப்பற்ற செயலே.

மேலும், 60 வருடங்களுக்கும் மேலாக இந்த தபால் கையேடுகள் அலுவல் மொழிகளான ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை எப்படி இந்த துறை ரீதியான தகுதி தேர்வுகள் நடைபெற்று வந்ததோ அதே முறையிலேயே நடைபெறுகிறது.

அப்படியானால் தற்போது அறிக்கை விடுப்பவர்களுக்கு இது நாள் வரை தமிழ் பற்று இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா? உண்மையில், இது பதவி உயர்வுக்கான, ஊதிய உயர்வுக்கான தேர்வோ அல்ல. தபால் துறையில் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்ல விரும்புவோருக்கான ‘தகுதி தேர்வு’ மட்டுமே.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தபால் கையேட்டை பார்த்து எழுதும் வகையில் இந்த தேர்வு நடைபெறுவதால், எந்த ஒரு தபால் ஊழியரும் தமிழில் தான் தேர்வு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காத நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி மக்களை மொழிரீதியாக பிரிக்க முற்படும் தமிழக அரசியல்வாதிகள் இனியாவது உண்மையை பேசி, ஆக்கபூர்வமான அரசியல் செய்வது நலம். இல்லையேல் மக்கள் உங்களின் மீது நம்பிக்கையிழப்பார்கள்.

  • நாராயணன் திருப்பதி,
    செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories