ஏக இறைவன்… அல்ல! ஏகத்துக்கும் இறைவன்!

Published:

godmayknow - 2026

ஏக இறைவன் அல்ல.. 
ஏகத்துக்கும் இறைவன்!

இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து…
குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து!

இறைவனுக்கு இணை வைப்பா?
எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல! 
இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்…
எளியோரைக் காத்தருளும் மனித உருவில் 
இறைவன் வருவான் என்ற தத்துவ தரிசனம் இங்கே!

கற்கள் வெறும் கற்கள்தான்..!
ஆலயத்தினுள் கல்லாய்ச் சமைந்திடினும்..
கைதொழும் பக்தன் உள்ளத்தால் 
கல் தெய்வமாகிறது! 
அவன் நம்பிக்கை 
இங்கே இறைவனை இறக்குகிறது!

இசையால் வசப்படுபவன்
நாட்டியத்தால் ஒட்டிக் கொள்பவன்
கலைகளால் கடவுள்தன்மையை
கல்லிலும் காட்டி நிற்பவன்!

இவை எதுவும் இல்லாமல் போனால்…
பாலைவனத்து மணல் வெளியில் 
கானல் நீர்க் காட்சிக்கு மயங்குவான் போல்…
வானத்தை நோக்கி கையெடுத்துக்கதறி
நீர்த் துளிக்காய் ஏங்க வேண்டியிருக்கும்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img