ஏக இறைவன் அல்ல..
ஏகத்துக்கும் இறைவன்!
இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து…
குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து!
இறைவனுக்கு இணை வைப்பா?
எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல!
இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்…
எளியோரைக் காத்தருளும் மனித உருவில்
இறைவன் வருவான் என்ற தத்துவ தரிசனம் இங்கே!
கற்கள் வெறும் கற்கள்தான்..!
ஆலயத்தினுள் கல்லாய்ச் சமைந்திடினும்..
கைதொழும் பக்தன் உள்ளத்தால்
கல் தெய்வமாகிறது!
அவன் நம்பிக்கை
இங்கே இறைவனை இறக்குகிறது!
இசையால் வசப்படுபவன்
நாட்டியத்தால் ஒட்டிக் கொள்பவன்
கலைகளால் கடவுள்தன்மையை
கல்லிலும் காட்டி நிற்பவன்!
இவை எதுவும் இல்லாமல் போனால்…
பாலைவனத்து மணல் வெளியில்
கானல் நீர்க் காட்சிக்கு மயங்குவான் போல்…
வானத்தை நோக்கி கையெடுத்துக்கதறி
நீர்த் துளிக்காய் ஏங்க வேண்டியிருக்கும்!