கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்… நாசர்

காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.

காவிரி நீரை சட்டப்படி பெற்று தந்த முதல்வருக்கு நன்றி. அரசுக்கு துணை நிற்போம். முதல்வரை விமர்சித்த கன்னட நடிகர்களுக்கு கண்டனம்… விஷால்

 

 

கன்னட நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் விஷால் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காவிரி நீர் பிரச்னையில் கர்நாடக நடிகர்கள் சிலர் தமிழக முதல்வருக்கு கொச்சை படுத்தும் வகையில் பேசியுள்ளனர். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

காவிரி பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எங்களது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில் ” காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில் ” காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

பொதுக் கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன்,கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories