தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூத்துக்குடி என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது
78.
என்.பெரியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின்
தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர் கருணாநிதியால், முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர். முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான கீதா ஜீவனின் தந்தை.
கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்த பெரியசாமி சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர்
காலமானார்.
அவரது உடல் இன்று தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
அவரது இறுதிச்சடங்கில், திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.