February 22, 2026, 4:02 PM
30.4 C
Chennai

மாமல்லபுரம் அருகே காரில் 3 பேர் எரிந்துபோன விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சி

car fire three died - 2026

சென்னை:

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவு ஒன்றில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு, கார் தீப்பிடித்து எரிந்து, அடனுள் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர்.

இது குறித்து விசாரித்தபோது, காருக்குள் இருந்தவர்கள் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன் (52), அவரது மனைவி ரமாதேவி (46), மகள் திவ்யஸ்ரீ (24) என தெரியவந்தது. திவ்யஸ்ரீ இத் தம்பதிக்கு ஒரே மகள் என்பதும், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது கணவர் சரத் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் ராணுவ மையத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தனர். மேலும், நேற்று அளிக்கப்பட்ட தடயவியல் துறை சோதனை முடிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், 3 பேரின் உடல் மீதும் தீ பிடிப்பதற்கு முன்பாக பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதும், கார் இன்ஜின் மற்றும் ஏ.சி இயந்திரத்தில் எந்தவிதக் கோளாறும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

முன்னதாக, மாமல்லபுரம் போலீசார் கிழக்குக் கடற்கரை சாலை, உத்தண்டி சுங்கச் சாவடியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் 27ஆம் தேதி இம்மூவரும் வந்த கார் எவ்வித பிரச்னையும் இல்லாமல் செல்வது தெரிய வந்தது. மேலும், சில நாட்கள் முன்பு திவ்யஸ்ரீயின் கணவர் சரத், தாம்பரம் போலீஸ் உதவி ஆணையருக்கு பதிவு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் வரதட்சணை கேட்டு அடித்ததாக போலீசில் புகார் கொடுப்பேன் என மனைவி திவ்யஸ்ரீ தன்னை மிரட்டுவதாகக் கூறி இருந்தார். இதனை உதவி ஆணையர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகியோருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், 27ம் தேதி, புகார் கொடுத்த சரத் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து வெகுநேரம் காத்திருந்தாராம். அப்போது, இம்மூவரும் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதும், பதான்கோட்டில் திவ்யஸ்ரீக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் இது வெளியே வந்தால், தங்களுக்கு அவமானம் என்று கருதிய மூவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும், அவர்கள் 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories