December 6, 2025, 5:07 AM
24.9 C
Chennai

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

courtallam

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கே குற்றாலம் பராசக்தி நகர் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் பார் வசதி இல்லாததால், மது வாங்குபவர்கள் பலர் அந்த இடத்திலேயே மது அருந்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அறை எடுத்து தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், பராசக்தி நகர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த கடைக்கு விரைந்து செல்வதற்காக பிரதான சாலையை விட்டுவிட்டு தனியார் வீடுகளின் சந்து பொந்துகளில் நுழைந்து ஏராளமானோர் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, குற்றாலத்தில் திறந்த வெளியில், சாலையோரத்தில், காரில் இருந்தபடி மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கே மது அருந்துவோரிடம் இருந்து மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த உத்தரவுகளை காவல்துறையினர் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை, வேறு இடத்திற்கு மாற்ற, பகுதிவாசிகள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories