February 24, 2026, 9:24 AM
25.7 C
Chennai

போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

passport - 2026

சென்னை:
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச் சேர்ந்த ராமு என்பவரை போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கடந்த மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் தவிர, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் போலியாக தயாரித்து உள்ளார்.

ராமுவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய உளவுப்பிரிவு காவலர் ஏட்டு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஏட்டு முருகன், ராமுவுடன் கைகோத்து அவர் தயாரிக்கும் போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள்தான் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். விசாரணையில் இந்த விவகாரம் தெரிய வந்ததை அடுத்து, ஏட்டு முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போலி பாஸ்போர்ட்டு விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வேறு சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் கண்ணகி நகரைச் சேர்ந்த தபால்காரர் தனசேகர் என்பவர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிய இவர், விரைவுத் தபால்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தபால்காரர் தனசேகர் ஏட்டு முருகனுக்கு உதவியாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் வேங்கடாசலபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திருவல்லிக்கேணி பகுதியில் ஒருவர் கைது செய்யப் பட்டிருப்பது இப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வழங்கிய போலி பாஸ்போர்ட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

Topics

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories