செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா
முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ.
முத்துராமலிங்கம் தலைமை தாங்கி வாஞ்சிநாதனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
இதில் தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட
தொடர்பு அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும்
மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



