ஆண்களுடன் பழகியதால் காதலியைக் கொன்றாராம்: கல்லூரி மாணவி கொலையில் காதலன் வாக்குமூலம்

murder சென்னை: ஆண் நண்பர்களுடன் பழகியதால், தனது காதலியைக் கொன்றதாக, தாம்பரம் அருகே கல்லூரி மாணவி கொலையில் கைதான அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். வடபழனி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அந்தோணியின் மகள் கிரேஸி ஷாலினி (21).  அரசு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.  கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரேஸி ஷாலினி பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த படப்பை ஆரம்பாக்கத்தில் நத்தம் பீவி என்பவரது வீட்டில் கிரேஸி ஷாலினி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் பீவி வெளியூர் சென்ற போது வீட்டைப் பூட்டி சாவியை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர் அப்துல் ரசாக்கின் மகன் ரபீக்கிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. பெயிண்டர் ரபீக்கிடம் போலீசார் விசாரித்த போது காதலியான கல்லூரி மாணவி கிரேஸி ஷாலினியை பூட்டிக் கிடந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர். ரபீக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்… நானும், கிரேஸி ஷாலினியும் வடபழனியில் உள்ள பள்ளியில் சிறு வயது முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் காதலித்து வந்தோம். கல்லூரிக்குச் சென்றது முதல் கிரேஸி ஷாலினி என்னிடம் முன்பு போல் பழகுவது இல்லை. அவள் செல்போனில் ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தாள். இதனை நான் கண்டித்தும் அவள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். உறவினர் நத்தம் பீவி வெளியூர் சென்றதால் அவரது வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை கிரேஸி ஷாலினியை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பர்கள் குறித்து கிரேஸி ஷாலினியை கண்டித்தேன். அவள் என்னைத் திட்டினாள். ஆத்திரம் அடைந்த நான் மாடு கட்ட வைத்திருந்த கயிறால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர் பயத்தில் வீட்டைப் பூட்டி விட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories