சென்னை: ஆண் நண்பர்களுடன் பழகியதால், தனது காதலியைக் கொன்றதாக, தாம்பரம் அருகே கல்லூரி மாணவி கொலையில் கைதான அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். வடபழனி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அந்தோணியின் மகள் கிரேஸி ஷாலினி (21). அரசு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரேஸி ஷாலினி பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த படப்பை ஆரம்பாக்கத்தில் நத்தம் பீவி என்பவரது வீட்டில் கிரேஸி ஷாலினி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் பீவி வெளியூர் சென்ற போது வீட்டைப் பூட்டி சாவியை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர் அப்துல் ரசாக்கின் மகன் ரபீக்கிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. பெயிண்டர் ரபீக்கிடம் போலீசார் விசாரித்த போது காதலியான கல்லூரி மாணவி கிரேஸி ஷாலினியை பூட்டிக் கிடந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர். ரபீக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்… நானும், கிரேஸி ஷாலினியும் வடபழனியில் உள்ள பள்ளியில் சிறு வயது முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் காதலித்து வந்தோம். கல்லூரிக்குச் சென்றது முதல் கிரேஸி ஷாலினி என்னிடம் முன்பு போல் பழகுவது இல்லை. அவள் செல்போனில் ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தாள். இதனை நான் கண்டித்தும் அவள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். உறவினர் நத்தம் பீவி வெளியூர் சென்றதால் அவரது வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை கிரேஸி ஷாலினியை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பர்கள் குறித்து கிரேஸி ஷாலினியை கண்டித்தேன். அவள் என்னைத் திட்டினாள். ஆத்திரம் அடைந்த நான் மாடு கட்ட வைத்திருந்த கயிறால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர் பயத்தில் வீட்டைப் பூட்டி விட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
ஆண்களுடன் பழகியதால் காதலியைக் கொன்றாராம்: கல்லூரி மாணவி கொலையில் காதலன் வாக்குமூலம்
Popular Categories


