அரசுப் பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகள் தேவை: சரத்குமார்

Sarathkumar_Aismkசென்னை: அரசுப் பள்ளிகளில் ப்ரிகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப் பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பு 5 வயது பூர்த்தியானதில் இருந்து தொடங்கியது.  பின்னர் LKG, UKG போன்ற வகுப்புகள் தொடங்கியதிலிருந்து  3 வயது பூர்த்தி  ஆனதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கி விட்டது.  இன்னும் ஒரு படி மேலாக,  3 ஆம் வயது ஆரம்பத்திலேயே Pre Kg.   என்ற வகுப்பில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.  பட்டப்படிப்பு, மேற்படிப்பு,  பொறியியல், மருத்துவம் என்று கல்வி கற்கும் போது ஏறக்குறைய 20 வருடங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க நேரிடுகிறது. Pre Kg. LKG, UKG என்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்  ஆர்வம்  பெற்றொர்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லுதல், இதே வகுப்புகளில் குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமல்லாது விளையாட்டுகள் போன்ற தனி கவனம் கிடைத்தல் போன்ற காரணங்களால் 3 வயது முடிந்தவுடன்  பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது அவசியமாகி விட்ட்து. பெற்றோர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கனிசமான  / அபரிமிதமான கட்டணம் வசூலித்து வருகின்றன. சில பள்ளிகள் Play School என்றும் மழலையர் பள்ளிகள் என்றும் நடத்தி வருவதும் கண்கூடு. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்குக் கூட LKG,UKG படித்திருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயம் எழுதப்படாத விதியாக இருப்பதற்கு பெற்றோர்களின் ஆர்வம் காரணமா? அல்லது பள்ளிகளின் நிர்பந்தம் காரணமா? என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆக, தெரிந்தோ, தெரியாமலோ Pre kg முதலே பள்ளிப்படிப்பு ஆரம்பம் என்பது நடைமுறையாகிவிட்டது. எனவேதான் இந்த பிரச்னையில் அரசு களமிரங்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருபுறம் தங்கள் பிள்ளைகள் prekg  முதலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம், மறுபுறம் தனியார் பள்ளிகளில்  அபரிமிதமான கட்டணம்  என்ற இரண்டுக்கும் நடுவில்  சிக்கி ஏழை எளிய நடுத்தர மக்கள் தவித்து வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. Pre Kg யில் நன்கொடை கொடுக்கத் தொடங்கிதிலிருந்தே பெற்றோர்களின் கடன் சுமையும் தொடங்கி விடுகிறது. படிப்படியாக அந்த சுமை உயர்ந்து கொண்டே போகிறது. எனவே, அரசே Pre Kg. LKG,UKG வகுப்புக்களை தொடங்குவது குறித்து பரிசீலித்து  நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இதன்மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவு நிறைவேறும். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த வகுப்புகள் தொடங்குவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் அபரிமிதமான கட்டண வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சமுதாயத்தில் கல்விப் புரட்சிக்கு வழிவகுக்கும். தங்கள் பிள்ளைகள்  Pre Kg. LKG,UKG படித்தார்கள் என்ற மகிழ்வும் மனநிறைவும் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களுக்கும் ஏற்படும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் ஆரம்பப் பள்ளிக் கல்வியில்  Pre Kg. LKG,UKG வகுப்புக்களைத் தொடங்குவதற்கு சீரிய முயற்சி மேற்கொண்டு  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Topics

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories