காட்டுப் பன்றிகளால் தென்னை, வாழை, நெல் பயிர்கள் சேதம்! விவசாயிகள் சோகம்!

chizhavanthan banana field - 2026
#image_title

சோழவந்தானில் காட்டுப் பன்றிகளால் தென்னை வாழை நெல் பயிர்கள் சேதம்.

சோழவந்தான்: சோழவந்தான் வடகரை கண்மாய் தென்பகுதி பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கரில் வாழை தென்னை நெல் விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகரை கண்மாய் பகுதிகளில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாயப் பகுதியில் புகுந்து வாழை தண்டுகளை முட்டித்தள்ளி வாழை மரத்தில் உள்ள குருத்துகளை கடித்து தின்று விடுகின்றன

இதனால் வாழைகள் பெருத்த சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இதே போல் தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றிகள் பிடுங்கி எரிந்து தேங்காயில் உள்ள பருப்புகளை தின்று விடுவதாகவும் நெற்கதிர்கள் விளைந்துள்ள பகுதியில் நெற்கதிர்களை சேதம் படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றன

இதுகுறித்து வாழை விவசாயி மோகன்ராஜ் கூறியதாவது

சோழவந்தான் வடகரை தென்பகுதியான பேட்டை கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கரில் வாழை விவசாயம் சுமார் 6 லட்சம் செலவில் செய்து வருகிறேன் இரண்டு ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் விவசாய பகுதிக்குள் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தி குருத்துகளை தின்றுவிட்டு செல்கின்றன இதில் சில வாழைகளை திருப்பி நட்டு வைக்கிறோம் அதையும் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இதுபோக வாழையில் ஊடு பயிராக தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் அதையும் தென்னகன்றில் உள்ளகுருத்தையும் காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி விடுகின்றன இதுபோக இரவு நேரங்களில் இங்கு வருவதற்கு பயமாக உள்ளது அதிகாலையில் இரண்டு விவசாயிகளை காட்டுப்பன்றி கடித்திருக்கிறது இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வருவதால் நாங்கள் இப்பகுதிக்கு வருவதற்கு பயமாக உள்ளது இது குறித்து வேளாண்மை துறை வனத்துறையிடம் பலமுறை எடுத்துக் கூறியும் காட்டுப்பன்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை

இதனால் தொடர்ந்து இப்பகுதி உள்ள வாழை தென்னை கன்று நெற்கதிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை இந்த காற்றுப் பன்றிகள் செய்து வருகின்றன இனியாவது வனத்துறை காற்றுப்பன்றிகளை பிடித்து மலைப்பகுதியில் விட வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்

இதே போல் வடகரை கண்மாய் கீழ்பகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்து வரும் சரவணன் கூறியதாவது

என் வயலுக்கு வரும் காட்டுப் பன்றிகள் ஆண்டியப்ப மேடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக சென்று நெல் வாழை தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது இதற்காக என் வயல் அருகே கட்டுக் கம்பியால் தற்பாதுகாப்பு செய்து வருகிறேன் இருந்தாலும் இந்த கம்பியையும் காட்டுப் பன்றிகள் முட்டித் தள்ளி விடுகின்றன இதுகுறித்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பிடித்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories