காவிரி நீர் வந்தாச்சு; அய்யாக்கண்ணு விவசாயம் செய்! வலியுறுத்தி திருச்சி ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு!

hindumakkalkatchi petition - 2026

காவிரி நீர் திறந்துவிடப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதால், ஏழை விவசாயி அய்யாக்கண்ணு தனது பணியான விவசாயத்தை இனி பார்க்க வேண்டும் என்று கோரியும், அவரிடம் இருந்து போராட்டத்தின் போது பயன்படுத்தப் பட்ட மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகளை கைப்பற்ற வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்த போது…

மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மாலையாக அணிந்து கோவணம் கட்டி விவசாயிகளுடைய மானத்தை டெல்லி வரை பறக்கவிட்டார் அய்யாக்கண்ணு. தமிழர்களையும் தமிழக விவசாயிகளையும் அவமானப்படுத்திய போலி விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, காவிரியில் தண்ணீர் வந்த காரணத்தினால் விவசாயம் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளிடம் போராட்டத்தை தூண்டி விட்டு தமிழக அமைதியைக் கெடுக்க முயற்சித்ததால், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவரது தொழில் முதலீடாக இருக்கக்கூடிய மண்டை ஓடு, எலும்பு ,ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டியும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 23.07.2018 இன்று மனு ஒன்றைக் கொடுத்தோம்.

இந்து மக்கள் கட்சியின் சார்பில், என் தலைமையிலான குழுவினர் நெல் நாற்று உடன் வந்து மனு அளித்தனர். இதில், மாநில துணைத் தலைவர் சந்துரு, மாநில இளைஞரணி செயலாளர், கடலூர் மாவட்ட தலைவர் என் ஆர் பரணிதரன், திருச்சி மாவட்ட தலைவர் பரமானந்தம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாநில தொண்டரணி தலைவர் கணக்கன்பட்டி மாரிமுத்து, திருமுருகன் , கௌரவத் தலைவர் காவேரி உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் ராம.ரவிக்குமார்.

1 COMMENT

  1. IT IS THE RIGHT TIME TO TEAR THE MASK OF IYAKKANNU WHO HAS BROUGHT ILLFAME O THE TAMIL NADU FARMERS BY HIS IDIOTIC GESTURES EVEN IN DELHI. HE WANTED TO BECOME A NATIONAL FIGURE AND MAKE MONEY TAKING ADVANTAGE OF THE SITUATION. NOW HE SHOULD PROVE HE IS ACTUALLY TILLING THE LANDS. SUCH A RICH MAN PRETENDED TO BE A POOR FARMER.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories