உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை; கமல்ஹாசன்

maxresdefault 40 - 2026

கோவை: தேர்தலில் போட்டியிடுவது குறித்து பயிலரங்கில் ஆலோசிக்கப் பட்டது; தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது என்று கூறினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.

கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கமலஹாசன் பேட்டி அளித்தார் .

இந்தப் பயிலரங்கில் பல துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தனர் …  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பின் பிரச்சார ஆலோகர் அவினாஷ் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார் என்று தெரிவித்த கமல்ஹாசன், இதுபோன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதில் தேர்தலை எதிர் கொள்ளும் முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டது என தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை மக்கள் நலன் கருத்தில் கொள்ளப் படவில்லை என்பது தங்களின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.கவினர் கருத்திற்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என நினைக்கின்றனர். அது ஜனநாயக நாட்டில் ஒத்துவராத ஒரு விஷயம் எனவும் அவர் தெரிவித்தார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய கமல்ஹாசன், தேர்தலை உன்னிப்பாக கவனிப்போம், விமர்சிப்போம், மக்களுக்கு நல்லதை சொல்வோம் என தெரிவித்தார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

இதைவிட பெரிய தேர்தல்களம் வருவதால் அதற்கு தயாராகி வருகின்றோம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை தொடர்பான சட்ட விவகாரம் இவ்வளவு நாள் தாமதப்பட்ட பின்னர் இப்போது அவசரப்படக் கூடாது; எது நியாயமான விசயமோ, நேர்மையான விஷயமோ அது கட்டாயம் நடக்க வேண்டும் எனக் கூறினார் கமல்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையும் விமர்சிக்கக் கூடாது எனக் கூறினார். அதிமுக.,வினர் சப்பானி என படத்தின் கேரக்டரை சொல்லி பேசும் போது, அதற்கு பதிலுக்கு நாம் ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள் என்றார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தப் பயிலரங்கில் ஆலோசித்து வருவதாகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர் எனக் கூறிய அவர்,  மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்றார்.

மாற்றம் மாற்றம் என பேசிக் கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்த கமல், தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் சிறை வரை பரவி இருப்பதாகக் கூறினார். தாம் இதுவரை சினிமா பற்றி எதுவும் பேசவில்லை என்பதால், தாம் ஒரு முழுமையான அரசியல்வாதியாகவே இந்தக் கருத்துகளைப் பேசியுள்ளதாகவும் கூறினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories