திருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு! கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை!

madurai kuruvithurai1 - 2026

மதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

madurai kuruvithurai - 2026

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 14ஆம் தேதி கொள்ளையடிக்கப் பட்டது. இது குறித்து கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், மாவட்ட

கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் அந்த நான்கு சிலைகளும் மீட்கப்பட்டன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகளைப் பார்வையிட்டு, இந்தக் கொள்ளை தொடர்பாக இன்று விசரணை நடத்துகிறார்.

முன்னதாக, குருவித்துறையில் வைகை கரையோரம் சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை அர்ச்சகர்கள் கோயிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோயிலில் அபாய மணி ஒலித்தது. இதையடுத்து கோயில் காவலர்கள் ராஜகோபுர அவசர வழியே உள்ளே சென்று சுற்றி பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை.

இதையடுத்து மின் வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசி தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்துள்ளனர்.

ஆனால், அதிகாலை கோயில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்குப் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கோயில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

kuruvithurai theft - 2026

இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப் பட்ட தகவலின் பேரில், போலீஸார் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சிலைகளை திருடுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories