திருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு! கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை!

madurai kuruvithurai1 - 2026

மதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

madurai kuruvithurai - 2026

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 14ஆம் தேதி கொள்ளையடிக்கப் பட்டது. இது குறித்து கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், மாவட்ட

கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் அந்த நான்கு சிலைகளும் மீட்கப்பட்டன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகளைப் பார்வையிட்டு, இந்தக் கொள்ளை தொடர்பாக இன்று விசரணை நடத்துகிறார்.

முன்னதாக, குருவித்துறையில் வைகை கரையோரம் சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை அர்ச்சகர்கள் கோயிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோயிலில் அபாய மணி ஒலித்தது. இதையடுத்து கோயில் காவலர்கள் ராஜகோபுர அவசர வழியே உள்ளே சென்று சுற்றி பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை.

இதையடுத்து மின் வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசி தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்துள்ளனர்.

ஆனால், அதிகாலை கோயில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்குப் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கோயில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

kuruvithurai theft - 2026

இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப் பட்ட தகவலின் பேரில், போலீஸார் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சிலைகளை திருடுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories