கஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

Published:

gaja4 - 2026

கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கஜா புயல் வலுவடைந்து வரும் நிலையில், நாகை மாவட்ட நிர்வாகம்
38 கிராமங்களைச் சேர்ந்த 87ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. நாகையில் கடல் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுவதாக நாகை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இதனிடையே, கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக்காக 32 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை, கஜா புயல் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

பிறப்பித்துள்ளது. கடலூர் – ககன்தீப் சிங் பேடி, நாகை – டி.ஜவஹர், புதுக்கோட்டை – சம்பு கல்லோலிக்கல், ராமநாதபுரம் – சந்திரமோகன், திருவாரூர் – மணிவாசன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img