திருச்சானூர் தாயாருக்கு பட்டுக் குடை, புடைவை சீர்வரிசைகள்: ஆர்.ஆர். கோபால்ஜி!

rrgopalji - 2026

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 5 வெண்பட்டு குடைகள், பட்டு புடவை, சீர் வரிசைகள் காணிக்கையாக சமர்ப்பிக்கப் பட்டதாக,  இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி தெரிவித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாள் பிரமோற்சவத்தில் தினந்தோறும் காலை, இரவு ஆகிய வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று இரவு முக்கிய வாகன சேவையான தங்க கஜ வாகன சேவை நடை பெறுகிறது. அப்போது மகாலட்சுமி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

கஜ வாகன சேவையில் அலங்கரிப்பதாக சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி தலைமையில் 5 வெண்பட்டு குடைகள், பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு கோவில் செயல் அலுவலர் ஜான்சிராணியிடம் வழங்கப்பட்டன.

உதவி செயல் அலுவலர் சுப்ரமணியம், விஜிலன்ஸ் அதிகாரி அசோக் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி தமிழக பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் கருட சேவை அன்று சுவாமி வீதி உலாவின்போது பயன்படுத்துவதற்காக 11 பட்டு குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு கடந்த பிரம்மோற்சவத்தின் போது வழங்கப்பட்டது.

இதேபோன்று திருச்சானூர் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்திற்கு வெண்பட்டு குடைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று 5 வெண் பட்டு குடைகள் , பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories