சென்னை… ஞாயிறு அன்று 65 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

02 July13 electric train - 2026

சென்னை: பேசின்பிரிட்ஜ் – வில்லிவாக்கம் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஞாயிறு காலை 10:05 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், கடம்பத்துார், திருத்தணி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இதே ஊர்களுக்கு இயக்கப்படும், ஆறு ரயில்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து, சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மூன்று ரயில்கள் என, மொத்தம், 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு மதியம், 2:25 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில், நாளை, சென்ட்ரல் – ஆவடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், ஆவடியில் இருந்து, திருத்தணிக்கு, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும்

அரக்கோணத்தில் இருந்து, காலை 8:10 மணி திருவள்ளூரில் இருந்து காலை 9:10 மணி, பட்டாபிராமில் இருந்து காலை 10:30 மணி, திருத்தணியில் இருந்து காலை 9:40 மணிக்கு சென்ட்ரலுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், நாளை ஆவடி – சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

சிறப்பு ரயில்கள்: ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு, காலை 11:10 மணிக்கும், பட்டாபிராமுக்கு மதியம், 1:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9:45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 11:55 மணி, மதியம் 1:50 மணி மற்றும் 2:25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1:15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories