‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்!

Published:

S muthiah madrasmusings - 2026

பத்திரிகையாளரும், வரலாற்று எழுத்தாளருமான முத்தையா உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.முத்தையா. இவரது தந்தை பெயர், என்.எம்.சுப்பையா செட்டியார்.

இவர் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொழும்பு நகர முதல்வராகப் பணியாற்றிய பெருமை மிக்கவர். எனவே, எஸ்.முத்தையா கொழும்பில்தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

இதன் பிறகு அமெரிக்காவில் 1946 முதல் 1951 வரை கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார். மெட்ராஸ் மியூசிங்ஸ் என்ற பத்திதிகையை நடத்தினார். சென்னை குறித்து அறியப்படாத பல அரிய தகவல்களை ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதினார்.

சென்னை வாழ் மக்களுக்கு நன்கு பழக்கமான மெட்ராஸ் மியூசிங்ஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் அதிகம் எழுதி வந்தார். சென்னை உருவான வரலாறு, சென்னையில் வாழ்ந்த பிரபலங்கள் பற்றி இந்து, ஆங்கில நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img