சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக 20 தமிழர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினரும் தங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினருக்குச் சொந்தமான ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் வி.பி.காலனி, தெற்குத் தெருவில் உள்ளது ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட். இங்கே நேற்று இரவு 11 மணி அளவில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வெளியே சென்ற பின்னர், கடை மேலாளர் சுதாகர் மற்றும் 3 ஊழியர்கள் விற்பனை விவரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். பெட்ரோல் குண்டுகள் விழுந்து உடைந்தது என்றாலும் தீப்பிடிக்கவில்லை. திடீரென குண்டு வீசப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த கடைமேலாளர் அயனாவரம் போலீஸில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிராவில் பைக்குகளில் வந்த 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் செல்வது தெரிந்தது. நேற்று இரவு அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே நாம் தமிழர் கட்சியின் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆந்திர அரசை கண்டித்து ஆவேசமாக பேசினர். கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தியபோது நாம் தமிழர் கட்சியினர் இதில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 min.Read
சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Hot this week
இந்தியா
முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
சற்றுமுன்
ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?
கட்டுரைகள்
அருந்தமிழ் 50: திறனாய்வு!
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
கட்டுரைகள்
பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
இந்தியா
முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
சற்றுமுன்
ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?
கட்டுரைகள்
அருந்தமிழ் 50: திறனாய்வு!
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
கட்டுரைகள்
பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

