தமிழகத்தில் நீட்தேர்வில் விலக்கு கேட்டு வலியுறுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

Published:

ops - 2026சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தான் ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ஏழுபேர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவை எடுக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் எழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அதிகாரம் படைத்த அமைப்பு. அவர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

 

Related articles

Recent articles

spot_img