மாணவி ஊஞ்சல் ஆடியதில் சுவர் இடிந்ததாம்! : மாணவிகள் இருவர் பலியான சோகச் சம்பவம்

wall-collapsed-chennai-commisioner-georgeசென்னை: சென்னையில் நேற்று மாணவிகள் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவத்துக்குக் காரணம், ஒரு மாணவி அந்த சுவரில் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சல் ஆடியதுதான் என்றும், சுமார் 40 வருட பழைமையான சுவர் இடிந்து விழுந்தது என்றும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை பள்ளிக்கூட ஆயா சீத்தாம்மா நேரில் பார்த்துள்ளார். சுவர் இடிந்ததும் முதலில் ஓடிச் சென்று மாணவிகளைத் தூக்கி கதறி அழுதுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் சீத்தாம்மா கூறிய போது… பகல் 1 மணி அளவில் மோனிஷா, நந்தினி, சந்தியா மூன்று மாணவிகளும் அப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தனர். அந்த சுவர் பகுதி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அங்கே தண்ணீர் மோட்டார் ஒன்று உள்ளது. அங்குள்ள 2 சுவர்களையும் இணைத்து நடுவில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். அதை துணி உலர்த்த பயன்படுத்துவர். அந்தக் கயிற்றில் சில மாணவிகள் ஒருவர் மாற்றி ஓருவர் ஊஞ்சல் ஆடுவதும் உண்டு. அதுபோல் ஒரு மாணவி ஊஞ்சல் ஆடிய போது, அந்த மாணவிகள் இருவரும் சுவர் ஓரம் ஒதுங்கி அமர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் பலவீனமான சுவர் இடிந்து விழுந்துள்ளது. மாணவிகள் இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். சற்று தள்ளி நின்ற மாணவி சந்தியா காயத்துடன் தப்பிவிட்டார் என்று கூறியுள்ளார். 1976-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், அப்போது 10 அறைகளுடன் கூடிய பள்ளிக்கூடம் மற்றும் சமையல் அறை கட்டப்பட்டது. அதில் சமையல் அறை தற்போது பயன்படுத்தாமல் கிடந்தது. இதனால் அந்த சமையல் அறை சுவர்களுக்கு நடுவில் கயிறு கட்டி துணி காயப்போட்டுள்ளனர். பலியான மாணவிகள் மோனிஷா, நந்தினி இருவரும் ஏழை மீனவர் குடும்பத்துக் குழந்தைகள். நந்தினியின் தந்தை மூர்த்தி இறந்துவிட்டார். தாயார் தேசமணி. நந்தினிக்கு ஒரு அக்காள் மற்றும் தங்கை. மோனிஷாவின் தந்தை கதிரேசன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தார். மகள் மோனிஷா இறந்த தகவலை அறிந்து அவரது தாயார் லட்சுமி கதறி அழுதார். காயம் அடைந்த சந்தியாவின் தந்தை பெயர் சக்திவேல். இதனிடையே சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் நேரில் சென்று மாணவிகள் இறந்த பள்ளியைப் பார்வையிட்டார். பள்ளியின் நிர்வாகி சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் பழைமையான சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சொல்ல முடியும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories