போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

rajinikanth3 - 2026

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.

இதனிடையே ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தனது ரசிகர்களிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கோரிக்கை வைத்தார்.

நான் கர்நாடகத்தில் 23 வருடங்கள் வாழ்ந்தேன். ஆனால் தமிழகத்தில் 43 வருடங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் கர்நாடகத்தில் இருந்து வந்திருந்தாலும் நீங்கள் என்னை வரவேற்று ஏற்றுக் கொண்டீர்கள். என்னை உண்மையான தமிழனாக ஆக்கியிருக்கிறீர்கள். எனக்கு என்று சில கடமைகள், பணிகள் இருக்கின்றன. அதுபோல் உங்களுக்கும் நிறைய கடமைகள், வேலைகள் இருக்கும். முதலில் அதை சரியாகப் பார்ப்போம். ஆனால், எப்போது போர் வருமோ அப்போது பார்த்துக் கொள்வோம்… என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img