சிறுவாணி அணையில்,8அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..

images 38 2 - 2026

கேரள வனப்பகுதியில் பெய்த மழையால்‌ சிறுவாணி அணையில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால், தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அணையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை அமைந்திருக்கும் கேரள வனப்பகுதியில் பெய்த மழையால், 15ம் தேதி, 40 அடியாக நீர் மட்டம் மொத்த உயரம் 50 அடிஉயர்ந்துள்ளது.கடந்தாண்டுகளில் இயற்கை சீற்றங்களால் பெருத்த சேதம் ஏற்பட்டதால், அணை பாதுகாப்புக்காக, 5 அடிக்கு குறைவாக, 45 அடிக்கு மட்டுமே நீர் தேக்க, கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 15ம் தேதி, 40 அடிக்கு தான் நீர் தேங்கியிருந்தது. மழைப்பொழிவு தொடர்ந்ததாலும், முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உட்பட அருவிகளில் இருந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், 50 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

images 34 2 - 2026
images 25 3 - 2026

கன மழை பெய்ததாலும், சிற்றருவிகளில் வரத்து இருந்ததாலும், நீர் மட்டம், 43 அடியாக உயர்ந்தது. அதனால், 16ம் தேதி 70 செ.மீ., உயரத்துக்கும், 17ம் தேதி 100 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டது. நேற்று காலை, 8;00 மணி நிலவரப்படி, 15 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மழை வேகம் சற்று குறைந்ததால், மதகு திறப்பு மீண்டும், 70 செ.மீ., ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டு, நேற்றைய தினம், 37 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மதகுகள், 70 செ.மீ., உயரத்துக்கு திறந்திருப்பதால், தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இது, தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, வனப்பகுதியில் கன மழை பெய்வதால், அணையின் பாதுகாப்புக்காக, தண்ணீர் திறந்து விடப்படுகிறது’ என பதிலளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், 45 அடி உயரத்துக்கு நீரை தேக்கி விட்டு, அதன் பின் திறந்து விடலாம். அதற்கு முன்னதாக திறந்து விட்டு இருப்பை குறைக்க வேண்டாம் என தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.

அதை கேட்காமல், மதகுகளை, 70 செ.மீ., உயரத்துக்கு திறந்து வைத்திருப்பதால், தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மதகுகளை மூட வலியுறுத்தி வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories