December 7, 2025, 6:19 AM
24 C
Chennai

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் தர்னா..

WhatsApp Image 2022.jpeg - 2025

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை இடமாற்றம் செய்யக் கோரி, தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

நாமக்கல் – திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில், முதல்வர் பால் கிரேஸுக்கும், அங்குள்ள பேராசிரியர்கள் சிலருக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வணிகவியல் துறை, பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த மாணவிகள்.
முதல்வர் பால்கிரேஸை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு பெற செய்தார். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த தருமபுரி மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் பால்கிரேஸ் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்களிடத்திலும் விசாரணை மேற்கொண்டார். 

போராட்டத்துக்கு மாணவிகளை தூண்டிய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை செய்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை கல்லூரி கலையரங்கில் மாணவிகளை அமர வைத்து கல்லூரி கல்வி என இயக்குனர் ராமலட்சுமி அவர்களிடம் குறைகளையும், தர்னா போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இதுபோன்ற போராட்டங்களில் மாணவிகள் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதுகுறித்து இணை இயக்குனர் ராமலட்சுமியிடம் கேட்டபோது; மாணவிகள், கல்லூரி நிர்வாகம் சார்பில் நடைபெறும் கலந்துரையாடலாகும். இதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories