December 6, 2025, 1:03 PM
29 C
Chennai

சேலம்-கருணை கொலை கோரி 6 குழந்தைகளின் தாயின் மனுவால் பரபரப்பு..

Tamil News large 3209225 - 2025

சேலம் அருகே கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கோரி, ஆறு குழந்தைகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், காடையாம்பட்டி அருகே, தும்பிப்பாடியில் உள்ள ரெட்டியூர் புது காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து; பெயின்டர். இவரது மனைவி சத்யா, 35; தம்பதிக்கு, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.திங்கட்கிழமை சத்யா தன் குடும்பத்துடன், நெத்திமேட்டில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர் மல்க எஸ்.பி., சிவகுமாரிடம் புகார் மனு வழங்கினார்.

மனுவில் கூறியிருப்பதாவது:
நானும், என் கணவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லாததால், அரசு எங்களுக்கு புது காலனியில் வீட்டுமனை ஒதுக்கியது.

இதற்கு, அதே ஊரைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எங்கள் ஊரில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தகராறு செய்தனர். பின், அரசு அதிகாரிகள் அளவீடு செய்து நட்ட முட்டுக்கல்லை பிடுங்கி வீசினர்.இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், வருவாய் அதிகாரியிடம் கடந்தாண்டு புகார் அளித்தேன். அவர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். கடந்த, 31ம் தேதி, 11 பேர் கும்பல் எங்கள் வீட்டிற்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களுடன் கணவர் மாரிமுத்துவை தாக்கினர். காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எங்களால் இனியும் கொடுமையை தாங்க முடியாது; தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எந்த நீதியும் கிடைக்காது. இந்த காரணத்தால் குடும்பத்துடன், கருணை கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், கொலைகார கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, குழந்தைகளுடன் சத்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories