February 23, 2026, 5:03 AM
25 C
Chennai

சேலம்-கருணை கொலை கோரி 6 குழந்தைகளின் தாயின் மனுவால் பரபரப்பு..

Tamil News large 3209225 - 2026

சேலம் அருகே கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கோரி, ஆறு குழந்தைகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், காடையாம்பட்டி அருகே, தும்பிப்பாடியில் உள்ள ரெட்டியூர் புது காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து; பெயின்டர். இவரது மனைவி சத்யா, 35; தம்பதிக்கு, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.திங்கட்கிழமை சத்யா தன் குடும்பத்துடன், நெத்திமேட்டில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர் மல்க எஸ்.பி., சிவகுமாரிடம் புகார் மனு வழங்கினார்.

மனுவில் கூறியிருப்பதாவது:
நானும், என் கணவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லாததால், அரசு எங்களுக்கு புது காலனியில் வீட்டுமனை ஒதுக்கியது.

இதற்கு, அதே ஊரைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எங்கள் ஊரில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தகராறு செய்தனர். பின், அரசு அதிகாரிகள் அளவீடு செய்து நட்ட முட்டுக்கல்லை பிடுங்கி வீசினர்.இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், வருவாய் அதிகாரியிடம் கடந்தாண்டு புகார் அளித்தேன். அவர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். கடந்த, 31ம் தேதி, 11 பேர் கும்பல் எங்கள் வீட்டிற்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களுடன் கணவர் மாரிமுத்துவை தாக்கினர். காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எங்களால் இனியும் கொடுமையை தாங்க முடியாது; தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எந்த நீதியும் கிடைக்காது. இந்த காரணத்தால் குடும்பத்துடன், கருணை கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், கொலைகார கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, குழந்தைகளுடன் சத்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories