December 6, 2025, 9:32 PM
25.6 C
Chennai

ஓசூர் அருகே, பிடிபட்ட ரூ.1.28 கோடி கள்ள நோட்டுகள்-3 பேர் கைது..

arrest1 - 2025

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரூ.1 கோடியே 28 லட்சம் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன. இது தொடர்பாக மூவரை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது பற்றிய விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. அத்திப்பள்ளி அருகே உள்ள சித்தாபுரம் பகுதியில் அலுவலகம் ஒன்று இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த நல்லக்கனி (53) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அதே அலுவலகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார்.

arrest4 - 2025

இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆடிட்டர், பைனான்ஸியர் என்று கூறி மக்களை ஏமாற்ற வந்தவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்தவர் நல்லக்கனி. கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். இவரிடம் 2 ஆயிரம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நோட்டுக்களை கர்நாடக மாநிலத்தில் புழக்கத்தில் விட முடிவு செய்த அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கர்நாடகத்தில் அலுவலகம் போல தொடங்கி உள்ளார். மேலும் கள்ள நோட்டுக்களை கர்நாடகத்திற்குள் கொண்டு வந்து, அவற்றை கர்நாடகத்தில் கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ஒரிஜினல் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்தது தெரிய வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories