மாணவர்களுக்கு விலையில்லாமடிக்கணினி
பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 209 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாமடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்
மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முதல் கல்வி ,முதலில் நீங்கள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் உங்களை சிறந்த மாணவராக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியருக்கு உள்ளது அதனால் தான் பல தூரங்களில் இருந்து உங்களை ஆசிரியர்களை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றனர் மேலும் தமிழக அரசு மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கென பல விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது பள்ளியில் படிக்கும் காலத்தில் பயன் பெற வேண்டும் என முன்னதகாவே மடிக்கணிகளை வழங்கி வருகிறது இதை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் கல்வி தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெத்சம்தாஸ், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், ஊராட்சி கழக செயலாளர் திருமால்முருகன் மற்றும் பொன்னுத்துரை,முருகேசன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.


