பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்புரம் ரகுமானியபுரத்தை சேர்ந்தவ சுப்பிரமணியன் மகன் குத்தாலிங்கம் என்ற சங்கர் (29). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் கடந்த 7ம் தேதி சிவகாசியில் இருக்கும் தன் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
பெற்றோர்கள் தனது மகனை உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் (பொ) விசாரணை நடத்தி காணாமல் போன சங்கரை தேடி வருகிறார்.
புது மாபிள்ளையை காணவில்லை
Popular Categories


