ஆங்கிலப் புத்தாண்டு: எப்படி வந்தது?

Published:

மதச்சார்பற்றவர்கள், பகுத்தறிவாளர்கள்,அறிவு ஜீவிகள்,ஜனவரிப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு!

இன்று அனுசரிக்கப்படும் புத்தாண்டைக் கொண்ட காலண்டரின் கதை தெரியுமா?
ரோமானியர்களால் உறுவாக்கப்பட்ட முதல் ரோமன் காலண்டரின் பெயர் ரோமலஸ். இந்த நாள் காட்டி, மார்ச் தொடங்கி, டிசம்பரில் முடியும்.பத்தே மாதங்கள் தான்.பனிக்காலங்கள் இடம் பெறாத 304 நாட்களைக் கொண்ட ஆண்டுக்கணக்கீடு. போர்க் கடவுளான செவ்வாய், அதாவது mars ஐ வைத்து மார்ச் மாதம் முதல் மாதம். இந்தப் பூக்கும் காலத்தைத் தொடர்ந்து, உதிரும் விதையை உலகம் பெருவதால், apreio என்ற சொல்லை முன்வைத்து ஏப்ரல் மாதம், அதைத் தொடர்ந்து வளரும் பருவத்தைக் குறிக்கும் கடவுளான மையா வின் பெயரில் மே மாதம், அதைத் தொடர்ந்து ஜுனியஸ் (junior) என்ற இளவலை முன்னிட்டு ஜூன் மாதம், பின் quintillis, sextillis,september, october,november, december என்று ஐந்து முதல் பத்து மாதங்கள் வரிசையில், அவைகள் காலண்டரில் அமையப்பெற்ற நிலையை வைத்துக் குறிக்கப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்குப் பின், கிரேக்கக் கடவுள்களின் பெயரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி, கடை மாதங்களாகச் சேர்க்கப்பட்டன,

ரோமப் நாகரீகத்தின் வீழ்ச்சி, கிறிஸ்தவ எழுச்சி க்குப் பின், இயேசு கிறிஸ்து பிறந்த கடக (capricon) மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு இந்த காலண்டர்கள் சீரமைக்கப்பட்டது (சீர் அழிக்க).
இந்த ஜனவரிக் கூத்து அரங்கேறுவதற்கு முன், சூரியனின் சஞ்சாரத்தை வைத்து, நில நடுக்கோடு, கடக ரேகை, மகர ரேகை போன்றவற்றைக் கொண்டு காலம் கணிக்கப்பட்டு வந்தது.இயேசு பிறந்த நாள், பலமுறை மாற்றப்பட்டு, டிசம்பர் 25 என்று தற்போது முடிவான capricon மாதம் முதல் மாதமாக மதத்தின் அடிப்படையில் உருவானது. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், ஜனவரி 1, டிசம்பர் 25 லிருந்து எட்டாம் நாள், அன்றுதான் ஏசுவிற்கு சுன்னத் செய்யப்பட்ட நாள் என்கிறார்கள்.
சூரியன் ராசிக்குள் பிரவேசித்து, பருவச் சுழற்ச்சி தொடங்கும் காலத்தைக் கொண்டாடிய மனித குலம், உலகம் தட்டை என்று சொன்ன கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த, அறிவியல் அடிப்படையற்ற ஒரு மூட நம்பிக்கையை, நவீனம், நாகரீகம்,உலகாதயம் மதச்சாற்பின்மை என்ற பெயரில் கொண்டாடுகிறது. இதுவும் “India is tolerant” என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு! இன்னும் அடிமையும், பேடிமையும் நம்மைவிட்டு விலகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்கு முன் ஒரு கணம் நம் நிலையை யோசிப்போம்!

Related articles

Recent articles

spot_img