“அவனையுணர்”
(மீ.விசுவநாதன்)
எதுபலமோ அதுவே அனுமன்
எதுநலமோ அதுவே அனுமன்
எதுசுகமோ அதுவே அனுமன்
எதுமருந்தோ அதுவே அனுமன்
எதுபணிவோ அதுவே அனுமன்
எதுதுணிவோ அதுவே அனுமன்
எதுதுணையோ அதுவே அனுமன்
இதுபுரிதால் அவனே மனிதன் !
எதுகனிவோ அதுவே அனுமன்
எதுஅழகோ அதுவே அனுமன்
எதுஉறவோ அதுவே அனுமன்
எதுஊயிரோ அதுவே அனுமன்
எதுகலையோ அதுவே அனுமன்
எதுசரியோ அதுவே அனுமன்
எதுஅறிவோ அதுவே அனுமன்
இதுஉணர்ந்தால் அவனே மனிதன் !
(ஸ்ரீ அனுமன் ஜெயந்தி தினம் – 09.01.2016)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா)


