பாசிடிவ் என்பது உண்மையாய் இருப்பது
ஆச்சர்யமோ ஆத்திரமோ
அழுகையோ அலுப்போ
துக்கமோ துடிப்போ
உணர்ச்சியது எதுவானாலும்
உணர்த்துவதில் தவறில்லை
உரைப்பதால் பலவீனம் இல்லை;
எத்தனை அடித்தாலும் அழாது மரம்;
எத்தனை இடித்தாலும் ஆத்திரப்படாது கல்;
அதனால் அவை சிறப்பாகிவிடுமா??
மனிதன் என்றால் உணர்ச்சி உண்டு .
பாசிடிவ் பாசிடிவ் என்றே
பதுக்கி வைக்க முனைய வேண்டாம்;
இயல்புணர்வை மறுப்பதில்
இன்னலே மிகும்;

மனிதன் என்றால் உணர்ச்சி உண்டு;
மறைப்பதால் மகிமை இல்லை;
உங்களுக்கு உண்மையாக இருந்திடுங்கள்;
உள்ளதை மறுக்காமல் ஏற்றிடுங்கள்
தனக்குத் தானே உண்மையாய் இருந்திடுங்கள்.
பாசிடிவ் என்பது உண்மையாக இருத்தலே.
—திரு வ ரங்கநாதன்



