பழனி சாமிக்கு நன்றி சோல்லோணும்..!

Published:

erode elect - 2026

அண்ணா.. என்னண்ணா நீங்க ஒன்னும் கருத்து எதுவும் சொல்லக் காணோம்… ஏதாவது சொல்லுங்கண்ணா..!

எதப் பத்தி தம்பீ…?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க..? இந்த ரோட்டப் பத்தித்தான்..

ஓ.. ஈரோடா? (ஏதாவது சொல்லியாகணுமே..! இல்லன்னா நம்மள சர்னலிச்ட்னே மதிக்க மாட்டாய்ங்களே… இன்னா சொல்லலாம்..?! 🙁 🙂 )
அதாவது தம்பீ… அந்த மக்கள்லாம் எடப்பாடிக்கு நன்றிக்கடன் பட்டிருக்காங்க… அவங்க எல்லாம் இப்போ பழனி சாமிக்கு வயிறார மனமார உளமார நன்றி சொல்லோணும்…

அதெப்டி சொல்றீங்கண்ணா…?!

தம்பீ… இடைத்தேர்தல்ல 90 சதம் ஆளுங்கட்சிதான் செயிக்கும்னு நல்லாத் தெரியும்..! அதனால நாம போட்டிபோடுறது வேஸ்டுன்னும் பழனி சாமிக்கு தெரியும். ஆனாலும்… மக்கள் மேல வெச்ச பரிதாப உணர்வு, பாசத்தால… நாங்க போட்டியிடுறோம்னு களத்துல இறங்கி…

களத்துல இறங்கி தோத்துட்டாங்கல்ல அண்ணா…

இல்ல தம்பீ… சொல்ல வுடு என்னைய! களத்துல இறங்கி… மக்களுக்கு எவ்ளோ பரிசுகள் பணம்லாம் கிடைக்க வெச்சிருக்காரு..!? அவரு மட்டும் தன் கட்சி ஆள போட்டி போட வைக்கலீன்னா… அந்த மக்கள ஆளும் தரப்பு யாராச்சும் சீண்டியிருப்பாங்களா..? யோசிச்சிப் பாரு..!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img