திருப்பூரில் முருகன் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தோர் மீது அத்துமீறிய தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

திருப்பூர் குமரன்குன்று கோவிலை அகற்ற முயற்சித்த அரசுத்துறைக்கு எதிராகப் போராடிய ஹிந்து முன்னணியினர் இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது , ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார் . நிர்வாகிகள் உட்பட இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

இந்தக் கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த்துறையினர் சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் , பக்தர்கள் , ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த  தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், காவல்துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் மீது போலீஸ் தாக்கி அவமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டு, இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநில அமைப்பாளர் ச. ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை:
 
இன்று திருப்பூர், பெருமாநல்லூர் அருகில் உள்ள கல்லாங்குன்றம் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபடும் முருகன் கோவிலை தமிழக அரசு அதிகாரிகள், போலீசுடன் வந்து இடித்துள்ளனர்.
 
இந்தக் கோவில் இடத்தை தனியாருக்கு பட்டா வாங்கித் தருவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வசூல் வேட்டை நடத்தினர். இதனை எதிர்த்து கோவிலைப் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டதில், கோவில் இருப்பதை உறுதி செய்தது.
 
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு காண வழிகாட்டியது. கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் தூண்டுதலால் தாசில்தார் தலைமையில் கோவிலை அதிகாரிகள் இடித்துள்ளனர்.
 
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளிடம் பேச சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் தாக்குதல் நடத்தியதில், அவரது கைகளில், பாதங்களில் அடிபட்டு இரத்தம் கொட்டி உள்ளது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் , இந்த போராட்டத்தில் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் ஜே.எஸ். கிஷோர்குமார், வி.எஸ். செந்தில்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நூறு ஆண்டுகள் பழமையான எந்த வழிபாட்டு இடத்தையும் இடிக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு எதிராக, கோவிலை இடிக்க உத்தரவு போடுவதே வழிபாட்டு பாதுகாப்பு சட்டப்படி, சிறைத்தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
 
தமிழக அரசு, சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது போல நடந்து கொள்கிறது. அரசே சட்டத்திற்குப் புறம்பாக நடந்தால் சாதாரண மக்களுக்கு சட்டத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?
 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதாவது காரணம் கூறி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து உள்ளது.
 
ஆனால் கோர்ட் உத்தரவு இருந்தும் மசூதி, சர்ச் போன்றவற்றை அகற்றாமல் அவற்றை காப்பாற்றி வருகிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு, அரசின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.
 
மனிதாபிமானமற்ற முறையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories