மதுரை மெஸ்: காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு 10% தள்ளுபடி!

kavalan - 2026

மதுரையில் மீனாட்சி மெஸ் உணவகத்தில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற செயல்களால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வெளிய சென்றுவர மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்களை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறையால் காவலன் என்ற செயலி உருவாக்கப்பட்டது, அதனை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. அதில் எதாவது உதவி தேவைப்பட்டால் SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அனுப்பப்படும். பின்னர் விரைவாக சம்பவ இடத்துக்கே வந்து உதவி புரிவார்கள்.

kavalan 1 - 2026

மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் மீனாட்சி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் சிறப்பு சலுகை என போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது.

மேலும், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி என உணவகத்துக்கு வரும் பெண்களுக்கு வழங்கி வருகிறார். இவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள் மத்தியிலும், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

kavalan - 2026

காவலன் செயலியை இதுவரை 5 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலியை கல்லூரி மாணவிகள், பணியாற்றும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories