தமிழகத்தில் இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 50 பேர் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 3094 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 1,91,754ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிர் உயிரிழந்த எண்ணிக்கை 10,741ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று 4403 பேர் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் பரவலாக தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.