தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

pm-modi
pm-modi

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு மணிக்கு தான் நாட்டு மக்களுக்கு ஒரு தகவல் கூறப் போவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிட்டிருந்தார்  

கொரோனா காலத்தில் இதுவரை 6 முறை உரையாற்றி உள்ளார் பிரதமர் மோடி. இன்று அவர் ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். 

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது… 

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வழக்கம் போல் வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.  நாட்டின் நிலைமை ஸ்திரத் தன்மையோடு நிலையானதாக உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் படிப்படியாக சீரடைந்து வருகிறது. 

நம் நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது என்றாலும்,  கொரோனா  ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை! அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 

pmmodi
pmmodi

அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. எனவே மக்கள் மிக்வும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மக்களைக் காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.  கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்றாலும், மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்!

மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களின் குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும்! 

தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு  எதிராக பல நாடுகள் போராடத் தொடங்கி உள்ளன.  

உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே அரசின் அடுத்த இலக்கு. இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்கத் தேவையான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.  தடுப்பூசிகள் இறுதிக் கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு அவை மக்களுக்கு கொண்டுசேர்க்கப் படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.

பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும்  பாதுகாப்பாக இருக்க வேண்டும்… – என்று கூறினார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories