“கேளும் பிள்ளாய் இராட்சஸனே” கைசிக புராணம்…

kaisika ekadasi1 - 2026

வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.

நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருமுறை அழகியநம்பி கோயிலுக்கு நம்பாடுவான் வந்த காட்டுவழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முற்பிறவியில் பிராமணன். பெரும் பாவம் செய்ததால் பிரம்மராட்சசன் ஆனவன். அவன் நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, “உன் உடலைப் புசிக்கப் போகிறேன்” என்றான். நம்பாடுவானோ, “நான் அழகிய நம்பியைப் பாடி சேவித்து விட்டுத் திரும்பி இதே இடத்திற்கு வருவேன், அப்போது நீ என்னைப் புசித்துக் கொள்ளலாம்” என்கிறான். உடனே ராட்சசனும் நம்பாடுவான் சொன்னதை நம்பி, அவனை அனுப்பிவைக்கிறான்.

kaisika ekadasi2 - 2026

நம்பாடுவான் கோயிலில் இரவு முழுக்கப் பாடினான். நம்பியைச் சேவித்தான். பின் ராட்சசனுக்கு வாக்களித்தபடி அவன் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். காட்டுவழியாக நடந்தபோது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் தாங்கி வந்தார். ‘வழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நிற்கிறான். உன்னைப் புசித்துவிடுவான். நீ வேறு வழியில் சென்று தப்பிவிடு’ என்று நம்பாடுவானைப் பார்த்துச் சொன்னார். அவனோ ‘இல்லை, நான் அந்த ராட்சசனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். அவனிடம் செல்ல வேண்டும். அவனைச் சந்திக்கத்தான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.

நம்பாடுவானைப் பார்த்தபோது, ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப் புசிக்க அவன் விரும்பவில்லை. அழகிய நம்பியின் முன் பாணன் பாடிய பாடலைப் பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் தொடர்ந்து உரையாடுகின்றனர். முடிவில் நம்பாடுவான் ராட்சசனின் பாவம் தீர அருள் வழங்குகிறான்.

இந்தக் கதை நாடகமாக நடந்தபோது, திருவடிவழகிய நம்பியே கண்ணுற்றார் என்பது வைஷ்ணவ சம்பிரதாயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories