December 5, 2025, 6:02 PM
26.7 C
Chennai

“கேளும் பிள்ளாய் இராட்சஸனே” கைசிக புராணம்…

kaisika ekadasi1 - 2025

வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.

நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர் ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசியில் அழகிய நம்பியைப் பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருமுறை அழகியநம்பி கோயிலுக்கு நம்பாடுவான் வந்த காட்டுவழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முற்பிறவியில் பிராமணன். பெரும் பாவம் செய்ததால் பிரம்மராட்சசன் ஆனவன். அவன் நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, “உன் உடலைப் புசிக்கப் போகிறேன்” என்றான். நம்பாடுவானோ, “நான் அழகிய நம்பியைப் பாடி சேவித்து விட்டுத் திரும்பி இதே இடத்திற்கு வருவேன், அப்போது நீ என்னைப் புசித்துக் கொள்ளலாம்” என்கிறான். உடனே ராட்சசனும் நம்பாடுவான் சொன்னதை நம்பி, அவனை அனுப்பிவைக்கிறான்.

kaisika ekadasi2 - 2025

நம்பாடுவான் கோயிலில் இரவு முழுக்கப் பாடினான். நம்பியைச் சேவித்தான். பின் ராட்சசனுக்கு வாக்களித்தபடி அவன் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். காட்டுவழியாக நடந்தபோது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் தாங்கி வந்தார். ‘வழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நிற்கிறான். உன்னைப் புசித்துவிடுவான். நீ வேறு வழியில் சென்று தப்பிவிடு’ என்று நம்பாடுவானைப் பார்த்துச் சொன்னார். அவனோ ‘இல்லை, நான் அந்த ராட்சசனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். அவனிடம் செல்ல வேண்டும். அவனைச் சந்திக்கத்தான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.

நம்பாடுவானைப் பார்த்தபோது, ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப் புசிக்க அவன் விரும்பவில்லை. அழகிய நம்பியின் முன் பாணன் பாடிய பாடலைப் பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் தொடர்ந்து உரையாடுகின்றனர். முடிவில் நம்பாடுவான் ராட்சசனின் பாவம் தீர அருள் வழங்குகிறான்.

இந்தக் கதை நாடகமாக நடந்தபோது, திருவடிவழகிய நம்பியே கண்ணுற்றார் என்பது வைஷ்ணவ சம்பிரதாயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories