60 ஆண்டுகளுக்குப் பின் நடந்த உசிலை புகழீஸ்வர ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்!

Published:

madurai spiritual news pugazheeswara aiyanar kumbabishekam - 2026

புகழீஸ்வர ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்!

மதுரை, உசிலம்பட்டி அருகே புகழீஸ்வர அய்யனார் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபேற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலியம்பட்டியில் அமைந்துள்ள புகழீஸ்வர அய்யனார் திருக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக அர்த்த மண்டபத்துடன் கோவில் கோபுரம் எழுப்பி இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக சாலை பூஜையில் நான்கு கால யாக பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, மூல ஸ்தானத்தில் உள்ள புகழீஸ்வர அய்யனார், பூர்ணக்கலா, புஸ்பக்கலா சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்., விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திரௌபதையம்மன் ஆலய பிரஹமோத்ஸவ விழா!

மதுரை சௌராஷ்ட்ரா தர்மராஜா சபைக்கு பாக்கியமான ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் 141வது ஆண்டு ஸ்ரீ மகாபாரத 67வது ஆண்டு பிரஹமோத்ஸவ வைகாசி பெருவிழா அக்னி வசந்த விழா, சௌராஷ்ட்ரா ஹை ஸ்கூல் மைதானத்தில் அக்னி வசந்தம் பூக்குழி இறங்குதல் இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில், 40 பக்தர்கள் பூக்குழி இறங்கி வந்தனர். விழா குழுவினர் ஏற்பாட்டில், நடைபெற்றது. தலைவர் ஜே டி ஹரி ராம் காரியதரிசிகள் மோதிலால் வாசுதேவன் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஜெகதீஷ் முத்துக்குமாரசாமி அவர்கள் பக்தர்கள் திரளாக வந்து அம்மனின் அருளாசி பெற்றுக் கொண்டார்கள்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

சக்தி ஆலயத்தில் சிவபெருமான் சிறப்பு பூஜை!

மதுரை அண்ணாநகர், வைகை காலனி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இக் கோயிலில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாலமுருகன், சத்ய சாயி பாபா ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜைகளை, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் செய்தார். இதையடுத்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு பால், பஞ்சாமிர்தம் சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

சொக்கையா சுவாமி மடத்தில் பௌர்ணமி பூஜை அன்னதானம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் சொக்கையா ஜீவசமாதி மடத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி, சொக்கையா சுவாமி விநாயகர் முருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பூஜை மற்றும் ஏற்பாடுகளை சொக்கையா சாமி மட நிர்வாகத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img